Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Tuesday, June 16, 2009

543. ஒரு சுயபுராண கேள்வி-பதில் ஆட்டம்

நண்பர் "ஜூனியர்" சொக்கன் அவர்களின் அழைப்பின் பேரில், இந்த சங்கிலித் தொடர் "ஜோதியில்" ஐக்கியமாகிறேன் :)

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

இது (என்றென்றும் அன்புடன் பாலா அல்லது எ.அ.பாலா) என்ற பெயர் நானே தேர்ந்தெடுத்தது தான். பிடிக்காமல் தேந்தெடுப்பேனா என்ன ? விசேஷ காரணம் எதுவும் இல்லை. பாலகுமாரன், "என்றென்றும் அன்புடன்" என்று கையெழுத்திடுவார். அது பிடித்திருந்ததால், எ.அ.பாலா என்ற திருநாமம் சூட்டிக் கொண்டேன். பலவகைப்பட்ட பாலாக்கள் தமிழ் வலையுலகில் இருந்ததால், பாலாவுக்கு prefix தேவையாக இருந்தது! மேலும், "வெறும் பாலா" என்று வைத்துக் கொள்ள முடியாது இல்லையா ? :-)

2) கடைசியா அழுதது எப்போது?

சமீபத்தில்: ஒரு விபத்து ஒரு மரணம் ஒரு பேரிழப்பு

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

ஒரு காலத்தில் (பள்ளி நாட்களில்) பிடித்திருந்தது. எழுதும் பழக்கம் குறைந்து விட்டதால் (எல்லாம் கணினியில் தட்டச்சு தானே), நிஜமான கையெழுத்து விகாரமாகி விட்டது :)

4) பிடித்த மதிய உணவு?

அப்படி எதுவும் கிடையாது. I am generally a very poor eater and not interested in any particular type of food.

5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?

நான் சோசியபிள் (கொஞ்சம் extrovert) டைப் தான். எளிதாக பழகி விடுவேன். அதனால், வலியச் சென்று பேசுவது எனக்குப் பிரச்சினை இல்லை. ரொம்பப் பிரபலம் இல்லாதவரை தயங்கவே மாட்டேன்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

நிச்சயம் அருவி தான். குரங்கு நீர்வீழ்ச்சிக் குளியல் மறக்க முடியாத அனுபவம்.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

அந்த ஒருவர் ஆணா, பெண்ணா என்பதைப் பொறுத்து ;-) (ஒரு பதிலாவது குமுதம் அரசு டைப்பில் இருக்க வேண்டாமா? :) )

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்ச விஷயம்: எளிதில் எளியவரிடம் மனமிரங்கும் சுபாவம். இது, உதவி செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகிறது. மற்றொன்று, என்னுடன் பழகும் / பேசும் எல்லாரையும் முக்கியமாக என்னில் எளியவரை எவ்வித மனத்தடையும் இன்றி சகஜமாக உணர வைக்க முயற்சிப்பது.

பிடிக்காத விஷயம்: மறதி, முன்கோபம் (2வது பொண்ணு பிறந்த பிறகு பரவாயில்லை :))

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

என்னைப் பற்றி OK, ஆனால், இப்படி பொதுவில் (அவரைப்பற்றி) சொல்வதை என் மனைவி விரும்புவாரா என்று தெரியவில்லை. அதனால் மன்னிக்க.

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

#2ல் சொன்ன என் அருமையான மருமகன் :(

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

பிரவுன் கலர் கால்சராய், லாவண்டர் கலர் சட்டை !

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

Nothing

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

பச்சை, எனக்குப் பிடித்த கலர்

14) பிடித்த மணம்?

மழை பெய்வதற்கு முன் வீசும் மண்ணின் மணம், ரத்னா கபே சாம்பார் மணம்...

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

"உருப்படாதது" நாராயண்: வாசிப்பனுபவம் மிக்கவர், ஆல்ரவுண்டர், பழக இனிமையானவர்

பெனாத்தல் சுரேஷ் : நல்ல நண்பர், பேச்சில் நகைச்சுவை மிளிரும், கிரியேடிவ் !

சுரேஷ் கண்ணனை ஸ்ரீதர் நாராயணன் ஏற்கனவே அழைத்து விட்டார்! நான் மிகவும் ரசிக்கும் எழுத்துகளுக்குச் சொந்தக்காரர், உலக சினிமா பற்றிய தீர்க்கமான பார்வை/அறிவு உடையவர்.

டோண்டு ராகவன் கடும் உழைப்பாளி, மன உரம், வாசிப்பனுபவம் மிக்கவர். "சமீபத்தில்" இவருக்கு தமிழ் வலையுலகை அறிமுகப்படுத்தி பாராட்டும், வசவும் ஒரு சேர வாய்க்கப் பெற்றேன் ;-)

Blogeswari விளம்பரத் துறையில் இருக்கிறார். நகைச்சுவை உணர்வு மிக்கவர். "தங்கிலீஷ்" பிளாக் வைத்திருக்கிறார் :-)

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

இத்தனை பெரிய எழுத்தாளர் ( சொக்கன்) எழுதியதில் பிடித்தது எது என்று கேட்டால் எப்படி பதிலளிப்பது ? ;-) அவரை ஜூனியர் என்று அழைப்பது, அவர் ஜிசிடி கல்லூரியில் எனது ஜூனியர் என்பதால் மட்டுமே, மற்றபடி நான் சாதாரணன் :) சீரியசஸாக, அவ்ரது எழுத்துத் திறமையை, உழைப்பை பாராட்டுகிறேன்.

17) பிடித்த விளையாட்டு?

அந்த எழவு தான் உலகத்துக்கே தெரியுமே !!

18) கண்ணாடி அணிபவரா?

ஆமாம்

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

நான் பெரிய அளவில் உலகத் திரைப்படம் எல்லாம் பார்க்கும் ஆள் கிடையாது, நண்பர் சுரேஷ் கண்ணனைப் போல! அவ்வப்பொழுது World Movies சேனல் பார்ப்பேன். சமீபத்தில் பார்த்த ஆம்புலன்ஸ் என்ற ஹாலந்து நாட்டுப் படமும், மாண்டரின் மொழிப் படமொன்றும் நன்றாக இருந்தன.

ஆங்கிலத்தில், ஆக்ஷன், சஸ்பென்ஸ்/ஹாரர் படங்கள் பார்ப்பேன். தமிழில், பசங்க, சுப்ரமணியபுரம் மாதிரியான வித்தியாசமான திரைப்படங்கள் + எல்லா ரஜினி திரைப்படங்களும் :)

20) கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க (தியேட்டரில்)

21) பிடித்த பருவ காலம் எது?

சென்னையில் இருக்கிறவனிடம் இது என்ன டுபாக்கூர் கேள்வி ? ;-)

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

வாசிப்பது குறைந்து விட்டது! சமீபத்தில் வாசித்தவை: A prisoner of birth (Jeffrey Archer), Freakonomics (Steven Levitt), The AlChemist (Paulo Coelho), வாசிப்பது: Dharmo Dynamics (Woody Prieb )

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

இப்போது மாற்றுவதில்லை. (ஒரு ஆப்பிரிக்கப் பாறையின் மேல் சீட்டாவும் (cheeta) அதன் 4 குட்டிகளும்)

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது: அலையோசை, மழையோசை
பிடிக்காதது: வெடிச்சத்தம், இரவில் நாய் குரைக்கும் சத்தம்

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

இந்தியாவுக்குள் தேராதூன், வெளியே, Denver(US), Ottawa(Canada), Haifa(Israel), Abudhabi

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

தெரியலியேப்பா! (நாயகன் கமலஹாசன் குரலில் படிக்கவும்), Jack of many trades, master of none ! சிறு வயதில் முறையான இசைப் பயிற்சி பெற முடியாமல் போனது வருத்தமே (குரல் வளம் இருந்தது!)

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பகற்கொள்ளையடிக்கும் பெரிய கடைகளில் பேரம் பேசாமல் பொருட்களை வாங்கும் நபர்கள், ரோட்டில் விற்பவரிடம், எட்டணாவுக்கும், ஒரு ரூபாய்க்கும் மல்லு கட்டும் கேவலமான செயல்!

எங்கும் எதிலும் ஊழல் (பிணத்திலும் பணம் பார்க்க அலையும் இரக்கமற்ற கூட்டம்)

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

(சில சமயங்களில்) கோபத்தில் வார்த்தையை விடுவது, கொஞ்சம் பொறாமை, இன்னும் நிறைய...

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

பேங்காக் (காரணம் கேக்க மாட்டீங்க இல்ல ;-) ), இனிமேல் தான் போகணும் :)

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

இன்னும் கொஞ்சம் மனுஷனாக, எல்லா விஷயங்களிலும் !!!

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

டிவியில் கிரிக்கெட் + சரக்கு ;-)

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் படும் அல்லல்....

எ.அ.பாலா
15 06 2009

Wednesday, December 05, 2007

Star10. ஒரு 'Chip'-இன் (உருளைக்கிழங்கு அல்ல!) கதை

நான் குப்பை கொட்டும் வன்பொருள் வடிவாக்கத் துறை சார்ந்து ஏதாவது எழுதலாம் என்று தோன்றியதால் விளைந்தது இந்தப் பதிவு! இப்பதிவு, ஒரு மின்னணு சர்குயூட் எவ்வாறு வடிவமைக்கப்பட்டு சிலிக்கன் சில்லாக (CHIP) உருவெடுக்கிறது என்பதை எளிமையாக விவரிக்க ஒரு முயற்சி!

Integrated circuit-ஐ (IC) உள்ளடக்கிய சிலிக்கன் சில்லுகள் வன்பொருள் (Hardware) வகையைச் சார்ந்தவை. ஆனால், இவற்றை வடிவமைக்கக் (design) கூட மென்பொருளின் (software) துணை தேவைப்படுகிறது! இந்த சிலிக்கன் சில்லுகள் நாம் தினசரி வாழ்வில் கையாளும் பல மின்னணு சாதனங்களில் உயிராக இயங்குகின்றன. உதாரணம்: தொலைக்காட்சி, கணினி, டிவிடி, வானொலி, கைத்தொலைபேசி, ஐபாட் etc.... பாக்கெட் வானொலியிலிருந்து ராக்கெட் இயக்கம் வரை, சிலிக்கன் சில்லின் ஆதிக்கம் விரவி இருக்கிறது! வன்பொருளை வடிவமைக்க உதவும் மென்பொருட்கருவிகளை EDA (Electronic design automation) tools என்றழைக்கிறோம்.

சிலிக்கன் சில் என்ற வன்பொருளில் உள்ள மின்னணு சர்குயூட் என்பது ஆயிரம் / லட்சம் / கோடி டிரான்ஸிஸ்டர்கள் (transistor) என்ற நுண்பொருட்களால் ஆனது. டிரான்ஸிஸ்டர் என்பதே ஒரு மின்னணு சர்குயூட்டை உருவாக்கத் தேவையான அடிப்படை building block என்று கூறலாம். டிரான்ஸிஸ்டருக்கு இரண்டு நிலைகள் உண்டு, மின்னணு கடத்தும் / கடத்தா நிலைகள். இவற்றை பூலியன் கணக்கில் (Boolean Algebra), மின்னணு கடத்தும் நிலையை 1 என்றும், கடத்தா நிலையை 0 என்றும் கூறுகிறோம். பூஜ்யமும் இல்லாத, ஒன்றும் இல்லாத ஒரு நிலையைப் (tristate) பற்றிக் கூறி, வாசிக்கும் மென்பொருளாளர்களை அதிகம் குழப்ப எண்ணமில்லை :)

டிரான்ஸிஸ்டர்கள் கொண்டு, குறிப்பிட்ட வன்பொருள் செயலாக்கம் (hardware functionality) உடைய கேட்'களை (gates) வடிவமைக்கலாம். இவற்றில் முக்கியமானவை, AND, OR, NOR, NAND எனப்படுபவை. உதாரணத்துக்கு, இரண்டு உள்ளீட்டுக் கணுக்கணும் (input nodes X,Y) ஒரு வெளியீட்டுக் கணுவும் (output node F) கொண்ட ஒரு AND மற்றும் OR கேட்'டின் ஸிம்பலையும், செயலாக்கத்தை விளக்கும் Truth Table-ஐயும் படத்தில் காணலாம். AND-இன் எதிர்மறை NAND, அது போலவே எதிர்மறையானவை OR-உம் NOR-உம். இரண்டுக்கும் மேற்பட்ட உள்ளீட்டுக் கணுக்கள் கொண்ட கேட்'களையும் உருவாக்க முடியும்.



ஒரு கேட்'டின் Truth Table என்பது உள்ளீடுகளின் வேறுபட்ட நிலைகளில், வெளியீட்டு நிலையை (0 அல்லது 1) சொல்கிறது. அது போலவே, பல உள்ளீடுகளும், வெளியீடுகளும் கொண்ட, பல கேட்'களால் ஆன ஒரு மின்னணு சர்குயூட் செயலாக்கத்தையே, ஒரு Truth Table வாயிலாக (பூலியன் வடிவில்) விவரிக்க முடியும்.

பெரும்பாலான மின்னணு சர்குயூட்கள் 'கிளாக்' (Clock, சுருக்கமாக CLK) என்ற உள்ளீட்டின் நேர வரையரைப்படி இயங்குகின்றன. ஒரே சீராக 0 நிலைக்கும் 1 நிலைக்கும் மாறி மாறி இடம் பெயரும் உள்ளீடு (input) கிளாக் என்றழைக்கப்படுகிறது. கிளாக்கை உள்ளீடாகப் பெற்றுச் செயல்படும் (சில கேட்'களால் ஆன) நுண்பொருளை FLIPFLOP என்கிறோம். மின்னணு சர்குயூட்கள் பொதுவாக பல உள்ளீடுகளும் வெளியீடுகளும் கொண்டவை. அவற்றின் செயலாக்கத்தை (அதாவது, கிளாக் வாயிலாக நிறுவப்பட்ட ஒரு குறிப்பிட்ட கணத்தில், உள்ளீடுகளின் நிலையைப் (0,1) பொருத்து வெளியீடுகளின் நிலை எவ்விதம் அமைய வேண்டும்) சரி பார்த்துக் கொள்ள அலைபடங்கள் (Waveform diagrams) உதவுகின்றன. கீழே உள்ள படத்தில் காண்க.



வன்பொருள் சர்குயூட் வடிவமைப்பு என்பதும், தற்சமயம், பொட்டி தட்டும் (code அடிக்கும்) வேலை தான்! இதற்கென்று பிரத்யேகமான வன்பொருள் வடிவாக்க மொழிகள் (Hardware Description Languages) உள்ளன. பொதுவாக, வெரிலாக் (verilog) மற்றும் VHDL என்ற இரண்டு மொழிகளே பயன்படுத்தப்படுகின்றன. இம்மொழிகளின் ஆணைகளைக் கொண்டு, பலவகை கேட்'களும், flipflop-களும் கொண்டு உருவாக்கப்பட வேண்டிய ஒரு வன்பொருள் செயலாக்கத்தை (hardware functionality), code வடிவில் எழுத/விளக்க முடிகிறது.

15 ஆண்டுகளுக்கு முன், இந்த மொழி வசதி இல்லை. அப்போதெல்லாம், ஒரு சர்குயூட்டை உருவாக்க, CAD கருவிகளின் துணை கொண்டு, கணினி திரையில் வன்பொருள் செயலாக்கத்தை ஒரு சர்குயூட் படமாக வரைய வேண்டிய சூழல் நிலவியது. இம்மொழிகள் வந்த பிறகு, மின்னணு சர்குயூட் வடிவாக்கப் பணியும் எளிதாகி, நிறைய நேரமும் மிச்சப்படுகிறது. அதோடு, மிகப்பெரிய (கோடிக்கணக்கான கேட்'களால் ஆன), கடினமான (complex) வன்பொருள் செயலாக்கத்தை, ஒரு வடிவாக்க அணியிடம் (Design Team), பல கூறுகளாகப் பிரித்து தர ஏதுவாகிறது. இறுதியில், அக்கூறுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், பெரியதொரு வன்பொருள் செயலாக்கத்தின் Top Level Code உருவாகிறது. ஒரு Sample code கீழே!



இப்படித் தயாரான குறியை (code) சிமுலேட்டர் (Simulator) என்ற EDA கருவி கொண்டு, நமக்குத் தேவையான வன்பொருள் செயலாக்கத்தோடு (மேலே குறிப்பிட்ட அலைபடங்கள் துணையோடு) சரி பார்க்க (validate) முடிகிறது. செயலாக்கத்தில் குறை/தவறு இருப்பின், மென்பொருளாளர்கள் செய்வது போலவே, குறியை debug செய்து மாற்றுகிறோம் !

அடுத்த கட்டம் தான் முக்கியமானது. ஸின்தஸைஸர் (Synthesizer) என்ற EDA கருவி தான், சிமுலேட்டர் மூலம் சரிபார்க்கப்பட்ட குறியை, வன்பொருள் சர்குயூட்டாக மாற்றுகிறது. அதை உருவாக்க, ஸின்தஸைஸர் கருவிக்கு, பலவகை கேட்'கள் பற்றிய விவரங்கள் அடங்கிய 'வன்பொருள் நூலகங்கள்' (Hardware Libraries), தேவைப்படுகின்றன. அந்த சர்குயூட்டை கணினித் திரையிலும் பார்க்க முடிகிறது. அதாவது, நாமே சர்குயூட் வரைந்து மெனக்கட வேண்டிய காலமெல்லாம் எப்போதோ மலையேறி விட்டது !

ஸின்தஸைஸர் கருவியின் வெளியீடு (output) மற்றொரு EDA கருவியான Place and Router-க்கு உள்ளீடாக(input) வழங்கப்பட்டு, இறுதியில், மின்னணு சர்குயூட்டின் வன்பொருள் செயலாக்கமானது, ஒரு சிலிக்கன் சில்லில் பதியப்பட வேண்டிய ஒரு வகை ஜியாமெட்ரிக் விவரங்கள் (அதாவது, சிலிக்கன் சில்லுக்குள் சர்குயூட்டின் ஒவ்வொரு கேட்'டும் (gate) அமைய வேண்டிய இடம் (co-ordinates) மற்றும் அதற்கும் மற்ற கேட்'களுக்கும் உள்ள இணைப்புகள் போன்ற தகவல்கள்) அடங்கிய கோப்பாக, சிலிக்கன் சில்லை தயாரிக்கும் (chip fabrication) நிறுவனத்திற்கு (Foundry) தரப்படுகிறது. கீழே உள்ள படத்தில் காண்பது போன்ற சிலிக்கன் சில்லுகள் உருவாகின்றன.


Place and Route கருவி மற்றும் Foundry குறித்து, அதிக டெக்னிகலான விவரங்களை தவிர்த்து விடுகிறேன்! இதற்கு மேல் உங்களை 'அறுத்தால்' அடி விழும் என்ற பயம் தான் :)
ஒரு 'சிப்'பின் கதையை இதை விட எளிமையாக என்னால் கூற முடியாது, சுபம் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, May 01, 2007

Appraisal - Managerial Tips "in English" - Part 2

தமிழில் இந்தக் கட்டுரையை வாசிக்க இங்கு சுட்டவும்.

Pl.read PART 1 and then proceed. In the previous posting, I had given 5 tips ! So, I will proceed with the 6th point.

6. The act of 'Setting Goals' (to the appraisee) should be done with clarity, foresight and long term planning. This is best illustrated by a real-life example!

When one of America's old and reputed university building was constructed, the site engineer had used timber (from a particular type of tree that grows tall and strong) for the beams and columns. After nearly 200 years, an experts' group was assembled to ascertain the fitness of the university building.

The experts found a long wooden beam that ran across the main hall of the building to have become weak because of wear and tear and recommended a replacement. Also, they put forth many other recommendations to strengthen the building structure after going through the building drawings in the old 'blue print' room. The experts were perplexed to see a small map (with directions leading to a specific area in the nearby forest marked clearly) attached to the main drawing.

When the experts went to the forest area marked in the map, they found a uniform rows of fully grown trees. They discovered to their amazement that the timber that had been used during the construction of the building (200 years ago) had come from similar type of trees.

The site engineer, at that time itself, with foresight and long term planning, had sown the seeds of that particular type of tree, in the nearby forest area. Those seeds have become giant trees and were standing tall in front of the amazed group of experts !

Since the site engineer realized that after many years the wooden columns and beams might have to be replaced and acted with foresight, it was possible to renovate the university building to its old pomp and splendour !

7. The skill of the manager lies in subtly making the employee (who is being appraised) understand that there is an hierarchy (authority) above the manager himself and that the manager is answerable to that authority! This essentially makes the employee realize that the manager can satisfy only some of his/her requirements and not all!

8. What is "OBJECTIVENESS" ?
To explain this clearly, the trainer gave a good example. In the company the trainer was working earlier, his manager appraised the trainer's colleague, in the marketing division. After the appraisal, the colleage looked crestfallen. Seeing this, after taking permission from his manager, the trainer spoke to the colleague. He found out that the person had come from a rural background that gave him a disadvantage in terms of self confidence and command over English. Still, with his hard work, he had achieved around 80% of the target assigned to him. Though the trainer had achieved more than his target, he was able to appreiciate the contribution of his colleague. That is OBJECTIVENESS!

To explain further, the trainer put forth a question, "If a very poor man donates Rs.100 (all that he has as savings) as contribution to the Tsunami relief fund and if a millionaire dontes Rs.10 lakhs to the same fund, whose contribution will you consider as really HIGHER ?" and made us understand the concept of OBJECTIVENESS :)

9. There is one important aspect of appraisal:
An appraiser has a responsibility in the performance of the appraisee!

To ensure this, a manager needs to set "Stertch Goals" to an employee working under him! By this, the manager is forced to provide "responsible support" to the employee to achieve his/her goals! The performance of the employee becomes the responsibility of the manager to some extent!

Also, the employee is able to move from his/her comfort zone to his/her courage zone and contribute better. This is a win-win situation for both the manager and the employee.

10. To illustrate his point, the trainer gave the example of the process of bring-up of an eagle young one.

Initially, eagle parents construct a comfortable nest on top of a cliff, for the young one, provide sumptuous amount of food, protect it from many dangers and generally are very supportive to make the young one's life happy and comfortable. That is, the young one is kept in the "COMFORT" zone by its parents

After sometime, as the young one grows, the parents dismantle the nest slowly exposing it to hot and cold weatherand also reduce the food supply. The parents often push it from the nest and when the young one starts flapping the wings and is about to hit the ground save it. Slowly and steadily it learns the art of flying !!!

The eagle parents are actually pushing the young one into the COURAGE zone to prepare the young one for a life without parental support. A manager needs to behave like the eagle parents with his employee (young one)!

11. A manager needs to understand the simple fact that all employees (working under him) cannot be SIMILAR. After all, each finger is UNIQUE! Some managers do not even grasp this. Also, a manager should NEVER compare one employee with another.

There is a type of bamboo in china, that grows very slowly in the first 5-6 years and in the next 5-6 weeks, it reaches an astonishing height of 90 feet! Like the chinese bamboo, there will be some employees who may take a longer time to learn at work (Learn it slow but good!). But, the manager should have the foresight to realize that in the long run, those employees are likely to be potential assets to the organization.

12. Individual aspirations are as IMPORTANT as the Organizational expectations. A manager's duty is to understand this and act accordingly.

13. The WORK PLACE should ideally be like a COLLEGE CAMPUS, where BUSINESS can be equated to CURRICULUM, MANAGERS / PROJECT LEADS can be equated to TEACHERS and CUSTOMERS can be equated to the DRIVE. The above four form the PILLARS of the building called ORGANIZATION.

The foundation of this building is the EMPLOYEES and the TOP ROOF is the TECHNOLOGY (Technology is the ENABLER!).

If the environment is such as above, there is bound to be abundant goodwill between the managers and the employees.

14. Finally, we will look at the 2 golden rules of APPRAISAL:
(i) During the appraisal, you COMMUNICATE, not SPEAK!
(ii) NEVER postpone the appraisal discussion and NEVER allow interruptions during the appraisal session!

I think, I have bored you enough by lecturing! Thanks for reading patiently!

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 342 ***

Wednesday, April 11, 2007

Appraisal - Managerial Tips "in English" - Part 1

தமிழில் இந்தக் கட்டுரையை வாசிக்க இங்கு சுட்டவும்.

சில நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தமிழில் எழுதிய மேற்கண்ட பதிவை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, இங்கு பதிவாக இடுகிறேன்.
*****************************
I attended a 3-hour training session on Appraisal. Normally, sessions like these will trigger a feeling of boredom (in me!) in the first 30 minutes itself. But for a change, this one was VERY INTERESTING and educative as the trainer was skilled and a good speaker as well. The session was interactive too. The trainer used anecdotes and small stories to substantiate the points he was trying to make. Let us see some of them in this posting.

1. Apprasial is not about evaluating the person, it is more about evaluating the persons' performace in the past year. This particular aspect is not given importance by many managers! For the manager to assess the performance of an employee effectively, he should ask himself, "Did the employee honestly perform the tasks assigned to him/her to the best of his/her abilities?". Also, the manager needs to get into the shoes of the employee he is assessing, to make the appraisal "objective". Let us look at an anecdote, to understand this aspect.

A goldsmith melts the gold to purify it before embarking on the process of making gold ornaments. In the olden days, goldsmiths followed a technique to know when the gold attained the required "purefied state"! That is, when he saw the reflection of his own face in the melted "gold drop", he learnt that the gold had reached its "purified state". This is an invaluable lesson he had learnt from his experience. This is applicable to annual appraisal as well :)

2. The trainer gave a brilliant example to prove the point that it is not advisable to assess an employee based on his/her old experience /records or external apperance.

A farmer went to the market place to buy an ox (bull), to be used for ploughing. He came across a strong looking ox and after checking its teeth (to know the age), he asked for the price. As the price seemed to be very less, he immediatley paid the price, the buyer asked for and drove the ox away.

The strong looking ox walked with the farmer for about 40 feet and then abruptly stopped for some rest(!), again started walking for about 40 feet and stopped and this went on for a while. The farmer was puzzled and went back to the market and admonished the seller that he had cheated him. The seller responded, "Sir, that ox was previously used to pull the garbage cart in the corporation. That is why it is behaving like this. It will become alright in due course of time, don't worry!" :)

3. It is important that the Work place is such that an employee feels happy and motivated at work. To prove that this is not the case in many organizations, he gave a piece of statistics to substantiate this point!!!

Narayana Hridhayalaya considered to be the best cardiac hospital in Asia, did a survey and found out that majority of the people who suffered an heart attack got admitted on a Monday! Monday is the day when people return to work after the weekly off and it is "quite nmormal" that the work pressure is very high on Mondays :)

As the saying goes, "Children generally walk to school, but run back home" implies that children simply love home and parents more than what they get at school!

4. The trainer said that the meaning of the word "Empowerment" was generally wrongly understood. That is, You cannot "empower" an employee by giving him more responsibility and authority! You need to make that employee realize his/her self-worth (in terms of his/her knowledge, work experience, skills ...) and make him self-motivated to truly "empower" that employee! Is it not ?? This meaning of "empowerment" was a real "eye opener" for me :)

5. One can understand more about "empowerment" looking at one of the motto statements of Hewlett Packard. It says:
"Every Employee has the RIGHT to committ a mistake!"
which means that this "freedom to committ mistakes" allows the employee to come out of his/her "comfort" zone to the "courage" zone and makes the employee aspire for more. It also helps in the career growth of the employee.

As a manager, when one appraises the performance of a person working under him, he realizes that the said employee's successes tend to fall in the "comfort" zone and his/her failures tend to fall in the "courage" zone. A manager needs to keep this in mind during an appraisal.

I will continue this article in my next posting, Thanks for reading.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 329 ***

Sunday, December 25, 2005

புகை வேலைக்குப் பகை

இன்று ஒரு செய்தி கண்ணில் பட்டது. இங்கிலாந்தில் ஒரு பெண்மணி பணிக்குச் சேர்ந்து முக்கால் மணி நேரத்தில், தன் மேலாளரிடம் தான் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர் என்று ஒப்புக் கொண்டு வேலையை இழந்தார் ! டாடா ·ப்ளோ கம்யூனிகேஷன்ஸ் என்ற அந்த நிறுவனம், அப்பெண் பணி நேரத்தில் புகை பிடிக்க மாட்டேன் என்று உறுதி கூறியும், புகை பிடிப்பவரை பணிக்கு அமர்த்துவதை நிறுவனத்தின் பாலிஸி அனுமதிப்பதில்லை என்று கூறி விட்டது !

ஒருவர் பணிக்கு ஏற்றவரா என்று நிர்ணயிப்பதற்கு பல முக்கியத் தகுதிகள் இருக்கையில், புகை பிடிப்பவர் பணியில் சேர தடை விதிக்கும் நிறுவன நிர்வாகத்திற்கு எதிராக சட்டபூர்வமாக நடவடிக்கை கோரப் போவதாக ஸோ·பி என்ற அப்பெண் கூறியிருக்கிறார். நேர்முகத் தேர்வின் போது புகை பிடிப்பது குறித்து தன்னை எதுவும் கேட்காமல் விட்டது யார் குற்றம் என்றும் கேள்வி எழுப்புகிறார்.

நிர்வாகமோ, தங்கள் பாலிசி சட்டத்திற்குட்பட்டது தான் என்றும், அவ்வாறு புகை பிடிப்பவரை பணியில் சேரா வண்ணம் நேர்மறையாக ஒதுக்குவதில் (positive discrimination) நிறுவனம் பெருமைப்படுகிறது என்றும் மார் தட்டுகிறது! புகை பிடிப்பவரின் உரிமையை வலியுறுத்தும் FOREST என்ற அமைப்போ, நிறுவன வளாகத்துள் புகை பிடிக்கத் தடை விதிப்பது என்பது வேறு, புகை பிடிப்பவரை பணிக்கு அமர்த்த தடை என்பது அராஜகம் என்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இந்தக் கூத்தையெல்லாம் பார்த்தா, நம்ம அமைச்சர் அன்புமணி எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணுதுங்க, என்ன நான் சொல்றது ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா


நன்றி: Deccan Chronicle

Monday, September 19, 2005

ஒரே கேள்வி --- ஒரே பதில்

கேள்வி: அரசியல், சினிமா இவ்விரு துறைகளிலும் வாரிசுகள் ஆதிக்கம் செலுத்துவதைப் போல் இலக்கியத் துறையில் இவ்வித ஆதிக்கம் காணப்படவில்லையே, ஏன் ?

--- அ.அப்துல் காதர், விளாத்திகுளம்

மதனின் பதில்: அரசியல் வாரிசுக்கு எந்தத் தகுதியும் தேவையில்லை. வெறுமனே வாரிசாகப் பிறந்தாலே போதும் ! சினிமாவில் கொஞ்சூண்டு நடிப்பு, டான்ஸ், சண்டைப் பயிற்சி மட்டுமே தேவைப்படும். பிறகு அப்பாவே மகனை நடிக்க வைத்து ஒரு மாதிரி ஒப்பேத்தி விடுவார் ! இலக்கியத்தில் இது எதுவுமே நடக்காது. யாருமே உங்களுக்கு உதவ முடியாது. சுருக்கமாக, இலக்கியத்துக்கு சுயமாகக் கற்பனை செய்தே தீர வேண்டும்.

டென்ஷனைக் குறைக்க ஒரு ஜோக் :)

பெண் 1: சாட்டிங் மூலமா ஏமாத்திப் பணம் பறிக்கலாம்னு பார்த்தா, அவன் பயங்கர கில்லாடியா இருப்பான் போலிருக்கு!

பெண் 2: எப்படிச் சொக்றே ?

பெண் 1: என் படம்னு ஜோதிகா படத்தை அனுப்பி ஏமாத்த நினைச்சேன் ... அவன் சூர்யா படத்தை அனுப்பறான் !

--- இலவை ஜோகா

நன்றி: ஆனந்த விகடன்

*162*

Wednesday, August 17, 2005

கண்கள் குளமாகும், மனம் வெதும்பும் !

Image hosted by Photobucket.com


உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய படம் இது !!!

1994-இல் சூடானில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, கெவின் கார்ட்டர் என்பவர் எடுத்த, புலிட்ஸர் பரிசு வென்ற புகைப்படம் இது !!! இப்படம், கொடும்பசியால் பீடிக்கப்பட்ட ஒரு கறுப்பின பெண்குழந்தை, ஒரு கிலோமீட்டர் அப்பாலுள்ள ஒரு ஐக்கிய நாட்டு உணவு மையத்தை நோக்கி ஊர்ந்து செல்வதை சித்தரிக்கிறது.

படத்தில் காணப்படும் பிணந்தின்னிக் கழுகு குழந்தையின் சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது !!! படத்தை எடுத்தவுடன் கார்ட்டர் அவ்விடத்தை விட்டு சென்று விட்டதால், அக்குழந்தையின் கதி என்னவாயிற்று என்று யாருக்குமே தெரியாமல் போனது.

மூன்று மாதங்களுக்குப் பின் கெவின் கார்ட்டர் மனஅழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார் !!!

Friday, August 05, 2005

Two Images

ஆஹா !!!




ஐயோ !!!

Monday, May 02, 2005

Devastated rape victim says she would rather die than live !

இந்த செய்தியை படிக்கும்போதே மனது பதைக்கிறது. இந்த அக்கிரமத்தை செய்த கேடு கெட்ட ஜென்மங்களை, மிருகங்களோடு ஒப்பிடுவது, அவற்றுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். 17 வயதிலேயே வாழ்க்கையை தொலைத்து விட்டதாக கதறும் இந்த அபலைக் குழந்தைக்கு என்ன கூறி ஆறுதல் தர முடியும் ? தன்னை எரித்துக் கொள்ளப் போவதாகவும் அப்பெண் கூறியிருப்பது, இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் நிலவும் அவலத்தையும், அயோக்கியத்தனத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இந்த மகாபாதகத்தை செய்தவர்களுக்கு மரண தண்டனை கூட சரியான தீர்ப்பாக முடியாது. பழிக்கு பழி சரியான வழி இல்லை என்றாலும் கூட, இவ்வரக்கர்களை சித்ரவதை செய்து (அவர்களே தங்களை கொன்று விடுமாறு கெஞ்சும் அளவுக்கு!) இறுதியாக மக்கள் முன்னிலையில் கொல்லுவது நிச்சயம் தவறில்லை என்று தான் யோசிக்கத் தோன்றுகிறது.

Thursday, April 28, 2005

தினம் பல வன்கொடுமைகள் -- பெண்களுக்கெதிராக

Mother of two
gangraped inside varsity campus


The animals that perpetrated this heinous crime deserve to be stoned to DEATH in public!

Wednesday, April 20, 2005

Bob Woolmer's Rediff Article - Worth Reading

India needs three dimensional players !

Thursday, April 14, 2005

உங்களுக்கு சில செய்திகள்! - Madam JJ, Vishwanathan Anand & Energizer

உங்களுக்கு சில செய்திகள்!

1. அரசியல்: ஜெ'யின் எள்ளல்!

பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டசபைத் தலைவர் திரு.GK மணி, தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப்பாடம் ஆக்குவதன் அவசியத்தை சட்டசபையில் தொடர்ந்து வலியுறுத்தியபோது, தமிழக முதல்வர் முன் வைத்த மறுமொழி சுவாரசியமாக இருந்தது! ஆனால், PMK-க்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது!!!

தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கு தலைமையேற்றிருக்கும் PMK, முதலில் அதன் தலைவரின் மகனும் மத்திய அமைச்சருமான Dr.அன்புமணிக்கு (இவர் பெரும்பாலும் 3 பீஸ் சூட் உடையில் வலம் வருபவர்!) தமிழ் கலாச்சாரப்படி உடை அணிவதை அறிவுறுத்துமாறு முதல்வர் கேட்டுக் கொண்டது சூப்பரோ சூப்பர்!!!

அதே நேரத்தில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை, உடை அணியும் விஷயத்தில், முதல்வர் மனம் விட்டு பாராட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது! முதல்வர் மொழியும், கலாச்சாரமும் பின்னிப் பிணைந்தவை என்றும் ( உடை விஷயம் வேறு, மொழி விஷயம் வேறு என்று விதண்டாவாதம் செய்த!) திரு.G.K.மணிக்கு எடுத்துரைத்தார்!

இதற்குப் பேர் தான் பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்காய் மாறிய கதை என்பதோ?

2. விளையாட்டு: ஆனந்துக்கு செஸ் ஆஸ்கார் விருது!

தமிழ்நாட்டின் விஸ்வநாதன் ஆனந்த், தொடர்ந்து இரண்டாவது வருடமும் (மொத்தம் நான்கு முறை!) செஸ் ஆஸ்கார் விருதை வென்றதன் வாயிலாக தான் உலகின் தன்னிகரில்லா முதல் நிலை ஆட்டக்காரர் என்பதை தெளிவாக நிரூபித்திருக்கிறார். ரஷியர் அல்லாதவரில் இவ்விருதை வென்றவர் ஆனந்த் ஒருவரே என்பதும், இதற்கு முன் 1997, 1998-லும் இதே விருதை அவர் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது! இவ்விருதுக்குரியவரை 64-MAGAZINE என்ற செஸ் பத்திரிகைக்காக 75 நாடுகளிலிருந்து 445 செஸ் விற்பன்னர்கள் (இதில் 74 கிராண்ட் மாஸ்டர்களும் அடங்குவர்!) தேர்வு செய்கின்றனர்!

சென்னையை சேர்ந்த இந்த 'செஸ் புலி' அதிவேக மற்றும் கிளாஸிக்கல் ஆகிய இருவகைப்பட்ட போட்டிகளிலும் பல பட்டங்கள் வென்றவர் என்பது பாராட்டப்பட வேண்டியது. ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் முதலாவதாக வந்த ஆனந்த் 5025 புள்ளிகளும், அடுத்து வந்த கேஸ்பரோவ் 3664 புள்ளிகளும் எடுத்தனர்! இதுவரை வழங்கப்பட்ட 10 செஸ் ஆஸ்கார் விருதுகளில், கேஸ்பரோவ் 5 முறையும், ஆனந்த் 4 முறையும் வென்றுள்ளனர் என்பதை பார்க்கும்போது இவ்விருவரும் கடந்த 9 வருடங்களாக செஸ் உலகை எந்த அளவுக்கு தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர் என்பதை உணரலாம்!!!

3. Energizer - சாத்தானின் போதைப் பொருள்!

சாத்தானின் போதை மருந்து என்றழைக்கப்படும் Methamphetamine, தற்போது அமெரிக்காவை ஆக்ரமித்து, ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வை நாசமாக்கிக் கொண்டிருக்கிறது! மெதம்·பெடமின், குறைந்த விலையில் சுலபமாக தயாரிக்க வல்ல ஒரு வேதியியற் கலவை!

ஐஸ் மற்றும் க்ரிஸ்டல் என்றும் அழைக்கப்படும் மெத் (METH), ஒருவருக்கு கிட்டத்தட்ட 12 மணி நேரம், போதை தரும் பெருமகிழ்ச்சியும் (EUPHORIA) சக்தியும் தரவல்லது. அது மனதை ஒருமுகப்படுத்த(!) உதவுவதோடு, இன்ப உணர்வுகளை அற்புதமாக அதிகப்படுத்துவதாகவும், மெத்-ஐ பயன்படுத்துபவர்கள் கூறுகிறார்கள்!!! ஆனால், மெத்-ஐ எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை!

மெத் மூளையின் செயல்பாட்டு வேதியியலை பாதிப்பதால், இதற்கு அடிமையானவர்கள் மனநோயாளிகளாகவும் (PARANOIA!), மூர்க்க குணம் கொண்டவர்களாகவும், குடும்பத்தையும், ஆரோக்கியத்தையும் புறக்கணிப்பவர்களாகவும் மாறி விடுகிறார்கள். அமெரிக்காவில் மெத் அதிகம் புழங்கும் மாகாணங்கள், Missouri, Iowa, Illinois, Indiana, Arkansas ஆகியவை.

மெத் போதைப் பழக்கத்தை உதறித் தள்ளிய அமெரிக்கர் ஒருவர், வேறெந்த போதைப் பொருளும் தராத "உயருணர்வை" (unique HIGH!) மெத் வழங்கியதாகக் குறிப்பிடுகிறார்! அவர் மேலும் கூறுகிறார் (இந்திய அரசாங்க குறும்படப் பாணியில்!), "மெத் அற்புதமானது! அது வேலை செய்யத் தொடங்கியவுடன் நீங்கள் மிகுந்த புத்திசாலியாகவும், சக்திசாலியாகவும் உணர்வீர்கள்! மெத் ஒன்றே உங்கள் வாழ்வின் முதலும் முக்கியமும் ஆன விஷயமாகக் கருதும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள்! ஏனெனில், மெத் தரும் ஜாலி அலாதியானது!!!"

இவர் சொல்றதைக் கேட்டா, TRY பண்ணிப் பாக்கலாம் போல இருக்கே ;-))

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, January 20, 2005

மற்றுமொரு காஞ்சி மடத்தில் கொலை!

சாமிக்கு டைம் சரியில்லை! அவர் பெயிலில் வெளியே வந்தவுடன், இது நடந்திருப்பதால், அரசு தரப்புக்குத் தான் ஆதாயம். சில வெறும் வாய்களுக்கு அவலும் :-) கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்.

Another murder rocks Kanchi mutt - Newindpress.com

Friday, December 31, 2004

நிவாரண நிதி வழங்க மேலும் சில சுட்டிகள்

https://www.aidindia.org/aidadmin/DonateToRRF.jsp

http://www.tsunamivictims.org/

http://us.rediff.com/news/2004/dec/27tsunami8.htm

http://www.worldvisionindia.org/cescripts/homepage.php

http://www.salesforcefoundation.org/aboutus/donate.html

https://secure.groundspring.org/dn/index.php?aid=2798

நீங்கள் அறிந்தவர்களிடமும், இவற்றைத் தெரிவிக்கவும்.

Monday, December 27, 2004

ஓ! என் அழகு மெரீனா!




நிலநடுக்கத்தைப் பற்றிய ஒரு விளக்கப்படம், கீழுள்ள சுட்டியில்:
http://news.bbc.co.uk/1/hi/world/4126809.stm

Sunday, December 26, 2004

கடல் கொந்தளிப்பால் பாதிப்பு - ஒரு செய்தித் தொகுப்பு

பலியானவர்களின் எண்ணிக்கை 2400-ஐ தாண்டி விட்டது. அதில் சுமார், 1500 பேர் நாகையிலும், 250 கடலூரிலும், 300 பேர் கன்யாகுமரியிலும், 150 பேர் சென்னையிலும், 100 பேர் புதுவையிலும் உயிர் இழந்தனர். சென்னை கடற்கரையில் இத்தனை பேர் இறந்ததற்கும், பலர் காணாமல் போனதற்கும் காரணம், இது ஒரு ஞாயிறு காலையில் ஏற்பட்டதால் தான். பீச்சில் தூங்கி கொண்டிருந்தவர்கள், காலையில் நடை பயின்றவர்கள், விளையாடிய சிறுவர்கள் என்று பலரும் இந்த திடீர்த் தாக்குதலை எதிர்பார்க்காமல், அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டார்கள், மூழ்கடிக்கப்பட்டார்கள். ராயபுரம் பகுதியில் உள்ள குப்பங்களிலும் பலர் இறந்து விட்டார்கள். ராயப்பேட்டை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் 100-க்கும் மேற்பட்ட சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையின் MRTS ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பொதுமக்களில் பலர் (இளைஞர்கள்/மீனவர்கள்) மீட்பு பணியில் ஈடுபட்டிருப்பதை காண முடிந்தது. மத்திய அரசு நெருக்கடி கால நடவடிக்கை குழு ஒன்றை கூட்டி விவாதித்ததன் தொடர்ச்சியாக, பிரதமர், கடற்படையை மீட்பு/நிவாரணப் பணியில் முழு அளவில் ஈடுபட, முடுக்கி விட்டுள்ளார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் (Red Alert) செய்யப்பட்டுள்ளன. மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுப்பட்டிணம் என்ற இடத்தில் ஒரு தேவாலயம் இடிந்து விழுந்து 40 பேர் பலியாயினர். அந்தமான்-நிகோபார் தீவிகளிலும் காலையில் 6 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பெருத்த உயிர்/பொருள் சேதம் ஏற்பட்டது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்று கூறப்படுகிறது. சேலத்திலும், சுற்றுப்பட்ட இடங்களிலும், பூமியில் பெரிய வெடிப்புகள் தோன்றியுள்ளன. தூத்துக்குடி துறைமுகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சுமார் 500 படகுகள் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டன என்று கூறப்படுகிறது. சகஜ நிலைக்கு வர சில நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது. ஆந்திராவில், திருப்பதி மற்றும் விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் நிலநடுக்கத்தின் பாதிப்பு இருந்தது. ஆந்திர கடலோரப் பகுதிகளில், கடல் கொந்தளிப்பால், சுமார் 200 பேர் இறந்ததாகத் தெரிகிறது.

சன் டிவி செய்திகளை உடனுக்குடன் வழங்கினாலும், அரசாங்கத்தை குறை சொல்வதே அதன் முக்கிய நோக்கமாகப் பட்டது. நம் நாட்டில், போர்க்கால நடவடிக்கை என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாது என்பது தான் உண்மை! ஒரு 'catastrophe'-ஐ எதிர்கொண்டு சமாளிக்கக்கூடிய அரசு அதிகாரிகள் மிகக்குறைவு. இதற்காக ஒரு பயிற்சியும் அளிக்கப்படுவதும் இல்லை. சிவராஜ் பாட்டீல் நாளை சென்னை வருகிறார். எதற்கு என்று புரியவில்லை? எல்லாம் ஆனபிறகு இந்த அரசியல்வாதிகள் வந்து ஆறுதல் சொல்வதால் என்ன பயன்? அவரவர் இடங்களிலேயே இருந்தபடி, வேலை செய்பவர்களை முடுக்கி விடுவதும், வேண்டிய உதவிகளுக்கு உத்தரவிடுவதும் செய்தாலே போதுமானது!

இன்னொரு நிலநடுக்கத்தை அடுத்த ஓரிரு நாட்களில் எதிர்பார்க்கலாம் என டிவியில் ஒரு நிபுணர் கூறினாலும், நான் பார்த்தவரை, தற்போது, சென்னை மக்களிடையே பீதியும், பதற்றமும் குறைந்துள்ளது. திருவல்லிக்கேணியில் இயங்கி வரும் SYMA (Srinivasa Young Men's Association) என்னும் அமைப்பு, பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் தற்காலிகமாக தங்குவதற்கு ஒரு சத்திரமும், அவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்! பல ஆண்டுகளாக, ஆரவாரம் இல்லாமல், SYMA சமூக சேவை செய்து வருகிறது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இந்த நிலநடுக்கம்/கடல் கொந்தளிப்புக்கு சென்னையில் நிலத்தடி நீரை ஒட்ட ஒட்ட உறிஞ்சுவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என நினைக்கத் தோன்றுகிறது. நிபுணர்கள் தான் விளக்கிச் சொல்ல வேண்டும்.

சென்னையில் நிலநடுக்கமும் கடல் கொந்தளிப்பும்

காலை சுமார் 6-45 மணிக்கு, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வை, சென்னையின் சில பகுதிகளில் மக்கள் உணர்ந்தனர். நான் ஆழ்ந்த நித்திரையில் இருந்தேன்! கட்டில் சிறிது கிடுகிடுத்ததாக, என் மனைவி பின்னர் கூறினார். நான் வசிப்பது சென்னை மெரீனா பீச் அருகில். நங்கநல்லூர் பகுதியில் வசிக்கும் என் நண்பர், தான் எந்த அதிர்வையும் உணரவில்லை என்று கூறினார். அதனால், எனக்கென்னவோ இந்த நிலநடுக்கத்தின் Epicentre கடலுக்குள் மையம் கொண்டதால் தான், கடலை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே இதன் தாக்கம் அதிகம் இருந்ததாகத் தோன்றுகிறது. இது நடந்து சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின், கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது என அறிந்தேன். மாமல்லபுரம் மற்றும் கடலூர் பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்து விட்டதாக டிவியில் செய்தி வந்தது. நான் கண்டதை சொல்கிறேன்.

திருவல்லிக்கேணி பகுதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக பீச் நோக்கி சென்று கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், என்ன தான் நடந்தது என்று அறியும் ஆவலில், இருசக்கர வாகனத்தில், அந்த ஜன சமுத்திரத்தின் ஊடே பயணித்து, மெரீனா பீச்சை அடைந்தேன். கடல் நீர் கடற்கரைச் சாலை வரை வந்த சுவடுகள் தெரிந்தன. நான் பார்த்தபோது, கடல் நீர் ஒரு குட்டை போல, பீச் மணற்பரப்பில் மட்டுமே காணப்பட்டது. சில கார்களும், இருசக்கர வாகனங்களும், பல தள்ளு வண்டிகளும், கட்டுமரங்களும் கடல் நீர் உள்புகுந்து, மீண்டும் திரும்பி சென்றதால் அலைக்கழிக்கப்பட்டு, அங்குமிங்கும் தாறுமாறாக கிடந்தன. இதன் தாக்கம், மெரீனா முதல் லைட் ஹவுஸ் வரை காணப்பட்டது.

தற்போது, நான் பார்த்தவரை, கடல் அமைதியாகவே உள்ளது. பல மீனவர்கள் உஷாராக (மீண்டும் கடல் கொந்தளிப்பு வரலாம் என்ற பயத்தில்) தங்கள் கட்டுமரங்களை பீச் ரோட் அருகே அமைந்த சிலைகள் இருக்கும் இடத்திற்கு இழுத்து வந்து வைத்திருக்கின்றனர். நான் ஒரு ஹெலிகாப்டர் மேலே வட்டமிடுவதையும் கண்டேன். ஞாயிறு காலையில் பீச்சில் கிரிக்கெட் ஆடும் என் நண்பன் கடல் நீர் வேகமாக (6/7 அடி உயரத்தில்) நிலம் நோக்கி வருவதை கண்டு அலறியடித்து ஓடி வந்ததாகவும், ஒரு கார் (உள்ளே ஆட்களுடன்) மூழ்கடிக்கப்பட்டதாகவும் கூறினான். கடல் கொந்தளிப்பைப் பற்றிய டிவி செய்திகள் இப்போது தான் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. இதற்கு முன்னர், சிலர் இது குறித்து புரளிகளை பரப்பி பதட்டத்தை உருவாக்கினார்கள். 23 பேர் இறந்து விட்டதாக இப்போது சன் நியூஸ் செய்தியில் பார்த்தேன். இந்த வருத்தத்திற்குரிய சமயத்திலும், ஒரு சிலரின் "இந்த இயற்கை சீற்றத்திற்கு முக்கியக் காரணம் ஜயேந்திரர் கைது செய்யப்பட்டது தான்!!" என்ற கருத்து சிரிப்பை வரவழைத்தது! நம் மக்கள் இருக்கிறார்களே!!!!!!!

Thursday, November 18, 2004

ஜெயேந்திரர் அறியா ஆறு கட்டளைகள்!


1. தன்னைச் சுற்றி இருப்பவர்களை எப்போதும் டம்மியாக வைத்திருக்க வேண்டிய சூட்சமங்களை கற்காமல் விட்டது!

2. தான் கைது செய்யப்பட்ட நிகழ்வை படம் பிடித்து டப்பிங்கோடு ஒளிபரப்ப ஒரு 'சங்கர டிவி' யை தொடங்காமல் விட்டது!
3. நடுத்தெருவில் அமர்ந்து கொண்டு 'தர்ணா' செய்யும் சாகஸத்தை அறிய மறந்தது!
4. செம்மொழியாம் தமிழ்மொழியில் புலம்புவதற்கு தேவையான புலமையைப் பெறத் தவறியது!
5. தனக்குச் சாதகமான வகையில் ஆட்களை சேர்த்துக் கொள்ளும் அல்லது கழற்றி விடும் சாணக்கியத்தனம் இல்லாமல் இருந்தது!
6. சமயதிற்கேற்ப (TIMING SENSE) ஊடகங்களுக்கு அற்புதமாக ஸ்டேட்மெண்ட் தரும் சாதுரியம் இல்லாமல் இருந்தது!

இவ்வாறு தேவையானவற்றை அறிய / கற்கத் தவறிய ஜயேந்திரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியவரே :-)
மேற்கூறியவை போல் இன்னும் ஏதாவது இருப்பின், நீங்களும் கூறலாம்!

Wednesday, September 15, 2004

மாமழை வேண்டி பாடுவோம்!

கீழிருக்கும் இரு பாடல்கள், சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் அருளிய மழை வேண்டும் "திருப்பாவை" பாசுரங்கள்! இவற்றை பலர் கூடிப் பாடி நெஞ்சுருக வேண்டினால், "பாழியம் தோளுடைய பத்மனாபன்", உலகத்தார் மகிழ, "சார்ங்கம் உதைத்த சரமழை" பெய்ய அருளுவான் என்று வைணவர்கள் நம்பி வருகிறார்கள்! இறை நம்பிக்கை உள்ள சென்னை வாசிகள், முடிந்தபோது, இப்பாசுரங்களை கூறி, மழையை அன்புடன் அழைக்கலாம்! நாடு செழிக்க நாமும் வாழலாம் அல்லவா?

476:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி*
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்*
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து*
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்*
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்*
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி-வாங்க *
குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்*
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

477:
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்*
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி*
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்*
பாழியம் தோளுடைய பற்பனாபன் கையில்*
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து*
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்*
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்*
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

Thursday, August 19, 2004

தமிழ்த்தாய் வாழ்த்து!


நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails